Wednesday 11 October 2017

வேதியியலாளர்கள்

கெபெர் என்றும் அறியப்படும் அபு மூசா சாபர் இபின் அய்யான் என்பவர், வேதியியலாளரும், வானியலாளரும், சோதிடரும், பொறியாளரும், புவியியலாளரும், மெய்யியலாளரும், இயற்பியலாளரும், மருந்தியலாளரும், மருத்துவருமான ஒரு பல்துறை அறிஞர். துஸ் என்னுமிடத்தில் பிறந்து அங்கேயே கல்வி கற்ற இவர் பின்னர் கூஃபாவுக்குச் சென்றார். சில வேளைகளில் இவர் தொடக்ககால வேதியியலின் தந்தை எனக் குறிப்பிடப்படுகிறார்
கிபி 10 ஆம் நூற்றாண்டிலேயே இவரது அடையாளம் குறித்தும், இவரது ஆக்கங்கள் எவை என்பது குறித்தும் இசுலாமிய உலகில் கருத்து முரண்பாடுகள் நிலவின.கிறித்தவ மேற்குலகில் இவரது பெயர் கெபெர் என இலத்தீனாக்கம் பெற்றிருந்ததுடன், 13 ஆம் நூற்றாண்டு ஐரோப்பாவில் பொதுவாக போலி கெபெர் என அழைக்கப்பட்ட ஒரு அடையாளம் தெரியாதவர் இரசவாதம், உலோகவியல் என்பன சார்ந்த ஆக்கங்களை கெபெர் என்னும் பெயரில் எழுதியிருந்தார்.

No comments:

Post a Comment